2025 ஆம் ஆண்டு இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 53 மற்றும் 54 ஆவது போட்டிகள் இன்று (04) பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமானது.
கொல்கத்தா – ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பிற்பகல் 03.30 இற்கு ஆரம்பமாகவுள்ள போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகள் பலபரீட்சை நடத்துகின்றன.
நாணயசுழட்சியில் வெற்றிபெற்ற கொல்கத்தா அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து விளையாடி வருகிறது.
இதேவேளை, இரு அணிகளும் இதுவரை 29 முறை மோதியுள்ள நிலையில் கொல்கத்தா அணி 15 முறையும் ராஜஸ்தான் அணி 14 முறையும் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.