ருமேனியாவில் நடைபெற்ற சூப்பர்பெட் கிளாசிக் செஸ் தொடரில் இந்தியாவின் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
புகரெஸ்ட் நகரில் நடைபெற்று வந்த இத்தொடரில் இந்தியா சார்பில் குகேஷ், பிரக்ஞானந்தா உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டனர்.
ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய பிரக்ஞானந்தாவை போல ஏனைய வீரர்களும் திறமையை வெளிப்படுத்தினர்.
3 பேரும் 9 சுற்றுகள் முடிந்த பின்னர் 5.5 புள்ளிகள் பெற்றிருந்த நிலையில் , வெற்றியாளரை தேர்வு செய்ய டைபிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற இறுதிச்சுற்றில் ஏனைய வீரர்களை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இதேவேளை, இந்த தொடரில் குகேஷ் 6 வது இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.