ஆன்லைன் பாஸ்போர்ட் சேவை நிறுத்தம்

பாஸ்போர்ட்தற்போது நடைமுறையில் உள்ள ஒன்லைன் பாஸ்போர்ட் சேவை இன்று (28) முதல் நிறுத்தப்படவுள்ளதாகவும், வருகை தரும் வரிசைப் பிரகாரம் கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கடவுச்சீட்டைப் பெறுவதற்கு இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட ஆன்லைன் முறையில் திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கும் முறை இதன் பிறகு செயல்படாது.

கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு வந்தவர்கள் இந்த நாட்களில் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Facebook | WhatsApp | sarinigar

Leave a Reply