இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டதாக சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா வழக்கு

வழக்கு
சுமார் மூன்று மாத காலம் இடைவிடாத ஆக்கிரமிப்பு இஸ்ரேல் படைகளின் குண்டுவீச்சு தாக்குதலில் 21,500 க்கும் மேற்பட்ட பொது மக்களைக் கொன்றது, மற்றும் முற்றுகையிடப்பட்ட பகுதியில் பரவலான அழிவை ஏற்படுத்திய பின்னர் காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இனப்படுகொலை செய்தமை போன்ற குற்றங்களுக்காக இஸ்ரேலுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தில் (ஐ.சி.ஜே) வழக்கு தொடர்ந்துள்ளது.

தென்னாப்பிரிக்காவினால் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு விண்ணப்பத்தில், காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் “இனப்படுகொலை தன்மை கொண்டவை, ஏனெனில் அவை பாலஸ்தீனிய தேசிய, இன மற்றும் இனக்குழுவின் கணிசமான பகுதியை அழிப்பதை நோக்கமாகக் கொண்டவை” என்று விவரித்தது.

“காசாவில் பாலஸ்தீனியர்களைக் கொல்வது, அவர்களுக்கு கடுமையான உடல் மற்றும் மன ரீதியான தீங்கு விளைவிப்பது மற்றும் அவர்களுக்கு உடல் ரீதியான அழிவை ஏற்படுத்தும் விதமான நிலைமைகளை உண்டாக்குவது ஆகியவை கேள்விக்குரிய செயல்களில் அடங்கும்” என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச நீதிமன்றம், உலக நீதிமன்றம் என்றும் அழைக்கப்படுகிறது, இது நாடுகளுக்கு இடையிலான தகராறுகளை தீர்ப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் சிவில் நீதிமன்றமாகும். இது போர்க்குற்றங்களுக்காக தனிநபர்களை விசாரிக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து (ஐ.சி.சி) வேறுபட்டது.

ஐ.நா.வின் உறுப்பு நாடுகள் என்ற முறையில், தென்னாப்பிரிக்கா மற்றும் இஸ்ரேல் இரண்டும் நீதிமன்றத்திற்குக் கட்டுப்பட்டவையாகும்.

தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா காசா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலின் கொள்கைகளை 1994 இல் முடிவுக்கு வந்த வெள்ளை-சிறுபான்மை ஆட்சியால் திணிக்கப்பட்ட தனது நாட்டின் கடந்தகால நிறவெறி ஆட்சியுடன் ஒப்பிட்டுள்ளார்.

பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் கொள்கைகள் நிறவெறிக்கு சமம் என்று பல மனித உரிமை அமைப்புகள் கூறியுள்ளன.

 

Assalamu Alaikkum!
Subscribe to our Sarinigar Telegraph site. Also like our Facebook Page and WhatsApp Channel. Post your valuable comments below. and Share with your friends too. Thanks!

Leave a Reply