ஓட்டைப் பை !

Daughters, அரசியல், பைஓட்டைப் பை !

• விலைகள் உயர்ந்து விட்டது..
• பெண்கள் நிர்வாணமாகி விட்டனர்..
• மஸ்ஜித்கள் காலியாகி பாழாகி விட்டது..
• அல்லாஹ் ﷻ வின் சட்ட திட்டங்கள் பாழாக்கப் பட்டுவிட்டது..
• திருடர்கள் நியாயம் பேசுகின்றார்கள்..
• முஜாஹித்கள் வழிநடத்தலில் கீழ் அநியாயம் செய்கின்றார்கள்..
• விபச்சாரம் என்பது ஹலாலாக்கப் பட்டு விட்டது..
• திருமணம் முடிப்பது என்பது இயலாத ஒன்றாக மாறி விட்டது..
• ஆண்களை நிர்வகிப்பவர்களாக பெண்கள் மாறி விட்டார்கள்..
• முஸ்லிம்களுடைய நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது..
• ஏழை எளியவர்கள் குடையின்றி மழையில் தவிக்கின்றனர்.

இறுதி நாளுக்கான பெரிய அடையாளங்களில் இன்னும் கொஞ்சம் தான் எஞ்சியியுள்ளது. எனவே துரிதமாக தௌபா செய்து பாவமன்னிப்பு தேடிக் கொள்ளுங்கள். ஓட்டைப் பைகளில் உங்கள் நன்மைகளை நிரப்புவதை விட்டும் தவிர்த்து கொள்ளுங்கள்.

• அழகாக வுழு செய்கின்றீர்கள்.
ஆனால்……
தண்ணீரை வீண் விரயம் செய்கின்றீர்கள்.
“ஓட்டைப் பை”

• ஏழைகளுக்கு உதவி செய்கின்றீர்கள்.
ஆனால்…….
அவர்களை இழிவுபடுத்தி ஏளனப் படுத்துகின்றீர்கள்.
“ஓட்டைப் பை”

• பகலில் நோன்பு நோற்று இரவில் நின்று வணங்கி இறைவனை வழிப்படுகின்றீர்கள்.
ஆனால்…
குடும்ப உறவுகளைத் துண்டித்து வாழ்கின்றீர்கள்.
“ஓட்டைப் பை”

• நோன்பு நோற்று பசி தாகத்துடன் பொறுமையாளராக இருக்கின்றீர்கள்.
ஆனால்…
பிறரை ஏசி, திட்டி சபிக்கின்றீர்கள்.
“ஓட்டைப் பை”

• உடம்பை மறைத்து அபாயாக்களால் போர்த்துகின்றீர்கள்.
ஆனால்…
அதனையும் தாண்டி நறுமணம் கமழ்கிறது, அலங்காரம் கண்னைப் பறிக்கின்றது.
“ஓட்டைப் பை”

• விருந்தினரை கண்ணியப் படுத்தி உபசரிக்கின்றீர்கள்.
ஆனால்…
அவர்கள் சென்ற பின்னர் அவர்களைப் பற்றி குறைகளைக் கூறி புறம் பேசுகின்றீர்கள்
“ஓட்டைப் பை”

இறுதியாக கூறுகிறேன் … ஓட்டைப் பைகளில் உங்களது நன்மைகளை நிரப்ப வேண்டாம். ஏன் எனில், சிரமப்பட்டு நீங்கள் நன்மைகளை சேகரிக்க, மறு புறத்தால் அவைகள் இலேசாக விழுந்து விடும்.

ஆச்சரியம்…

• ஹஜ், உம்றா கடமையை செய்ய முடியாது. காரணம் அதன் செலவுகள் அதிகமாம்.
ஆனால்… நல்ல சீசனைப் பார்த்து உள்நாட்டிலும், வெளி நாடுகளுக்கும் உல்லாச சுற்றுலா செல்ல முடிகின்றது.

• உழ்ஹிய்யா குர்பான் கொடுக்க முடியாது. காரணம் அதன் விலை அதிகம்.
ஆனால்… அதிக விலை கூடிய ஐ போன், மற்றும் ஆடம்பர பொருட்களை வாங்க முடியும்.

• தினமும் சமூகத் தளங்களில் நூறு செய்திகளை வாசித்து, கண்டதையும் பகிர முடியும்.
ஆனால்… குர்ஆனில் பத்து ஆயத்துக்களை ஓதுவதற்கு நேரமில்லை, நல்லதை பகிருவதற்கும் பக்குவமில்லை.

இறைவா…….!
எனக்கும், எனது சகோதர்களுக்கும் மன்னிப்பையும், நேரான நல் வழியையும் தந்தருள்வாயாக……! ஆமீன்!

தமிழாக்கம் :
மௌலவி இக்ராம் தீனி
உஸ்தாத் தாருல் உலூம் அல் புர்கானிய்யா அரபுக் கல்லூரி.
கண்டி.

|➥  Facebook
|➥  WhatsApp
|➥  Sarinigar – Contact Us

Leave a Reply