ஜனாதிபதி வேட்பாளர்களின் சொத்து மதிப்புகள் பற்றிய அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது

ஜனாதிபதித் தேர்தல்2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்களால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட சொத்து மதிப்புக்களின் பிரதிகள் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் பொதுமக்களின் பார்வைக்காக பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன.

இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய ஆணைக்குழு தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக அவற்றை பகிரங்கப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

அதன்படி, அதில் வெளியிடப்படக்கூடாது என்று கூறப்பட்டுள்ள தகவல்களைத் தவிர ஏனைய தகவல்களை இவ்வாறு வௌியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://ads.ciaboc.lk/profiles/16 – இந்த இனைப்பின் ஊடாக தொடர்புடைய குறிப்பிட்ட ஆவணங்களை அணுகலாம்.

Leave a Reply