நாமல் ராஜபக்ஷவின் கூட்டத்திற்கு கல்வீச்சு

Namal, நாமல்ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஹம்பாந்தோட்டை சிறிபோபுரவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கல்வீச்சு வீசப்பட்டுள்ளது.

கூட்டம் நடந்த இடத்திற்கு மூன்று கல் வீச்சுக்கள் வீசப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்த கல்வீச்சினால் கூட்டத்திற்கு கலந்துகொள்ள வந்த சிறுவன் ஒருவன் காயமடைந்து ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாமல் ராஜபக்ச, சமல் ராஜபக்ஷ மற்றும் ஷிரந்தர ராஜபக்ஷ ஆகியோர் இந்த பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தை அடுத்து அவர்கள் குறித்த கூட்டத்திற்கு வராததோடு, காயமடைந்த சிறுவனின் உடல்நலம் குறித்து விசாரிக்க சிராந்தி ராஜபக்ஷ மருத்துவமனைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

 

 

Follow us to get more useful articles like this soon. Subscribe to our SARINIGAR website. Also like our Facebook Page & WhatsApp channel. Post your valuable comments below. & Share with your friends too. Thanks!

Leave a Reply