புகையிரதம் மூலம் புத்தளத்திற்கு குப்பைகள்

பொதியிடப்பட்ட குப்பை, கழிவுகளை புகையிரதம் மூலம் கொண்டு செல்லும் பணிபொதியிடப்பட்ட குப்பை, கழிவுகளை புகையிரதம் மூலம் கொண்டு செல்லும் பணி இன்று (25) முதல் முறையாக ஆரம்பிக்கப்பட்டது.

வனவாசல கழிவு பொதியிடும் நிலையத்தில் சேகரிக்கப்பட்ட கழிவுகளை இவ்வாறு புகையிரத 20 பெரிய கொள்கலன்கள் மூலம் புத்தளம் அருவக்காடு குப்பைக் களஞ்சியத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

வன்வாசலில் இருந்து புத்தளம் வரை குப்பைகளை ஏற்றிச் செல்லப்பட்ட கொள்கலன்கள் அங்கிருந்து அருவக்காடு குப்பை களஞ்சியத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குப்பைகளை ரயிலில் கொண்டு செல்வதை எதிர்த்து நேற்றும் (24 ஆம் திகதியும்) இன்றும் (25) நூர் நகர் புகையிரத நிலையத்திற்கு அருகில் ஒரு சிறிய எண்ணிக்கையிலான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 

| FacebookWhatsApp |

Leave a Reply