வடக்கு கிழக்கு இணைப்பும் இல்லை! காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களும் இல்லை! – நாமல் ராஜபக்ஷ

வடக்கு கிழக்கு இணைப்பும் இல்லை! காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களும் இல்லை! - நாமல் ராஜபக்ஷஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை சமீபத்திய செய்திகள்

அனுராதபுரத்தில் நடைபெற்ற தனது முதலாவது தேர்தல் பேரணியில் உரையாற்றிய நாமல் ராஜபக்ச, வடகிழக்கு மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்.

எதை செய்ய முடியுமோ அதை செய்ய முடியும் என்றும், செய்ய முடியாததை செய்ய முடியாது என்று தான் நேரடியாக கூறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கம் வடக்கு கிழக்கை இணைக்காது என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பௌத்த நாட்டில் அனைத்து மதங்கள், மொழிகள் மற்றும் மக்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்றும் சவால்களைக் கண்டு தான் பயப்படவில்லை எனவும் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply