ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
“சர்வக்கட்சி மாநாட்டை கூட்டுமாறு அரசாங்கத்திடம் நாம் கோரிக்கை விடுத்துள்ளோம். பொருளாதாரம் தொடர்பில் உரிய ஆலோசனைகளை வழங்குவதற்கு நாம் தயார். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தொலைபேசி ஊடாக ஜனாதிபதியை தொடர்புகொண்டு இது தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளார்.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
