கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களில் மூவர் இனிமேல் சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர்.
இவ்வாறு சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளவர்கள், ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சுனந்த லியனபதிரண, கடந்த உள்ளூராட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற முகம்மது மன்சில் மற்றும் இந்திக்க சஞ்சீவ லியனகே ஆகிய மூவராவர்.
இவர்கள் இதுவரை ஒன்றுபட்ட எதிர்க்கட்சியுடன் இணைந்து செயல்பட்டு வந்த நிலையில், நேற்று (12) நடைபெற்ற கொழும்பு மாநகர சபை மாதாந்திர கூட்டத்தில் சுயாதீனமாக செயல்பட தீர்மானித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
The post கொழும்பில் பலமிழக்கும் எதிர்கட்சி! appeared first on LNW Tamil.
