ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகேவின் மகன் பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் விசாரணை நிமித்தம் அவர் மத்துகம பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகேவின் மகன் பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்துகம பகுதியில் வைத்து அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட வாகனம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்துகம பொலிஸார் இந்த விடயம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகேவின் மகன் விசாரணை நிமித்தம் மத்துகம பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.