இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி!

நுவரெலியா மாவட்டத்தில் சேவல் சின்னத்தில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்ற மட்டத்தில் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயல்படுவார்கள் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை தீர்மானித்துள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தேசிய சபை இன்று கொட்டைகலையில் உள்ள காங்கிரஸ் தொழில்நுட்ப வளாகத்தில் கூடியது. இக்கூட்டத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை உறுப்பினர்களுடன் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் அழைக்கப்பட்டிருந்தனர் . இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னிலை பெற்ற சபைகள் உட்பட நுவரெலிய மாவட்டத்தின் உள்ளுராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் முன்னிலை பெற்ற கட்சிகளின் உறுப்பினர்களின் தொகை அடிப்படையில் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகத்தை அமைத்துக் கொள்வதே பொருத்தமானது என்ற கருத்தின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது
என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொட்டகலையில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமையகத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தலைமையில் உள்ளூராட்சி நிறுவனங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கான சிறப்புக் கூட்டம் திங்கட்கிழமை (16) நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில், கலந்துகொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்றங்களில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு பல வெற்றிகளைப் பெற்றதாகவும், அதன்படி, பல உள்ளூராட்சி நிறுவனங்களில் அதிகாரத்தை நிலைநாட்ட தேசிய மக்கள் சக்தியுடன் கைகோர்க்க முடிவு செய்துள்ளதாகவும் உறுப்பினர்களிடம் கூறினார்.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!