ஈரான் அணுசக்தித் திட்டம் குறித்த சர்வதேச முகமையின் அறிக்கைகள் பாரபட்சமானவை: ஈரான் குற்றச்சாட்டு – Lanka Truth | தமிழ்

ஐ.நா. அவையின் சர்வதேச அணுசக்தி முகமை வெளியிட்ட ஈரான் அணுசக்தி தொடர்பான அறிக்கை பாரபட்சமானது என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் ரஃபேல் குரோசி (Rafael Grossi) ஈரான் அணுசக்தித் திட்டம் குறித்த பாரபட்சமான மதிப்பீடுகளை அறிக்கையாக வெளியிட்டு இஸ்ரேல் தனது தாக்குதல்களை நியாயப்படுத்த உதவியதாக ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாய் குற்றம் சாட்டியுள்ளார்.

எக்ஸ் தளத்தில் வெளியிட்ட தனது பதிவில், சர்வதேச அணுசக்தி முகமையின் அறிக்கைகள் பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளுக்கு அடிபணியாத நாடுகளின் மீது குற்றச்சாட்டுகளை புனையவும், அந்நாடுகளின் மீது போர் தொடுப்பதற்கான அடித்தளத்தை அமைக்கவும் ஒரு கருவியாகப் பயன்படுத்தப் படுகின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச அணுசக்தி முகமை வெளியிட்ட சமீப ஆய்வில், ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கு உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை என குறிப்பிட்டுள்ளது.

இது மிகவும் தாமதம். மேலும் உங்களுடைய பாரபட்சமான அறிக்கை ஒரு இனப்படுகொலை, போர் வெறிபிடித்த ஆட்சியால் ஈரானுக்கு எதிராக ஒரு ஆக்கிரமிப்புப் போரை நடத்தவும், எங்கள் அமைதியான வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட அணுசக்தி நிலையங்கள் மீதும் சட்டவிரோத தாக்குதலை நடத்தவும் அது பயன்படுத்திக்கொண்டது. இதன் மூலம் குரோசி அணு ஆயுதப் பரவல் தடுப்பு கட்ட மைப்பிற்குத் துரோகம் இழைத்ததுடன், சர்வதேச அணுசக்தி முகமையையும் போரில் ஒரு பங்குதாரராக மாற்றப்பட்டு விட்டது.

“இந்த போர்க் குற்றத்தின் விளைவாக எத்தனை அப்பாவி ஈரானியர்கள் கொல்லப்பட்டனர்/ஊனமாக்கப்பட்டனர் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று அவர் கேள்விகளை யும் எழுப்பியுள்ளார்.

பொய்களுக்கும் விளைவுகள் உண்டு. இந்த தவறுக்கு குரோசி பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

ஈரானில் அணு ஆயுதங்கள் இல்லை என உளவுத்துறை அறிக்கையை அமெரிக்க தேசிய புலனாய்வு துறை தலைவர் துளசி டிரம்ப்புக்கு தெரிவித்த பிறகும் ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேலுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.


0

நன்றி

Leave a Reply

error: Content is protected !!