கம்பஹாவில் துப்பாக்கிச் சூடு!

கம்பஹா நகரில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூடு நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள், சிறிய லொரி ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில்  லொரியில் பயணித்தவர்களுக்கு  காயம் ஏற்படவில்லை என்றும்  பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் லொரிக்கு மட்டுமே சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!