நீதிபதி மொஹமட் லபாருக்கு அநீதி – Jaffna Muslim

 

(எம்.ஆர்.எம்.வசீம்,இரா.ஹஷான்)

உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ர­ச­ராக மொஹமட் லபாரின் பெயரை ஜனா­தி­பதி பரிந்­து­ரைத்தபோது ஏன் அந்த பரிந்­து­ரையை மீளப்­பெற வேண்டும். இந்த விட­யத்தில் அர­சாங்­கத்தின் செயற்­பாடு வெறுக்­கத்­தக்­கது என ஐக்­கிய மக்கள் சக்­தியின் குரு­நாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்தார்.

அத்­துடன், கொழும்பு மாந­கர சபையை சூழ்ச்­சி­யினால் இந்த அர­சாங்கம் கைப்­பற்­றி­யுள்­ளது. இது முஸ்லிம் சமூ­கத்­துக்கு இழைத்த பிறி­தொரு அநீ­தி­யாகும் எனவும் அவர் மேலும் குற்றம் சுமத்­தி­யுள்ளார்.

பாரா­ளு­மன்­றத்தில் புதன்­கி­ழமை (18) நடை­பெற்ற வெளி­நாட்டு தீர்ப்­புக்­களை பரஸ்­பரம் ஏற்று அங்­கீ­க­ரித்தல், பதிவு செய்தல் மற்றும் வலு­வு­றுத்தல் சட்­டத்தின் கீழான கட்­ட­ளைகள் மீதான விவா­தத்தில் உரை­யாற்­று­கையில் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரை­யாற்­றி­ய­தா­வது, கடந்த ஆட்­சி­யா­ளர்­களின் விளை­யாட்டை இந்த அர­சாங்கம் மெல்ல மெல்ல ஆரம்­பித்­துள்­ளது.

மேல் நீதி­மன்­றத்தின் முன்னாள் தலைவர் பந்­துல கரு­ணா­ரத்­ன­வுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­ப­தாக பொது­மக்கள் பாது­காப்பு அமைச்சர் சுனில் வட்­ட­கல குறிப்­பிட்டார். ஆனால் ஆட்­சிக்கு வந்­ததன் பின்னர் அந்த கருத்து முழு­மை­யாக மறக்­க­டிக்­கப்­பட்டு நீதி­ய­ரசர் பந்­துல கரு­ணா­ரத்­ன­வுக்கு முழு­மை­யான ஓய்­வூ­திய விடு­முறை வழங்­கப்­பட்­டது.

மேல் நீதி­மன்­றத்தின் பதில் தலை­வ­ராக நீதி­ய­ரசர் மொஹமட் லபார் நிய­மிக்­கப்­பட்டார். 2024 டிசம்பர் மாத­ம­ளவில் உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ரசர் பத­விக்கு 15 வெற்­றி­டங்கள் காணப்­பட்ட நிலையில் மொஹமட் லபாரை உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­ச­ராக நிய­மிக்கும் இய­லுமை காணப்­பட்­டது,

கடந்த வெள்­ளிக்­கி­ழமை அர­சி­ய­ல­மைப்பு பேரவை கூடி­யது. இதன்­போது உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ரசர் பத­விக்கு மொஹமட் லபாரின் பெயரை ஜனா­தி­பதி பரிந்­து­ரைத்­துள்ளார். ஆனால் இந்த பரிந்­து­ரையை சபை முதல்­வ­ரான பிமல் ரத்­நா­யக்க மீளப்­பெற்­றுக்­கொண்­டுள்ளார். உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ர­ச­ராக மொஹமட் லபாரின் பெயரை ஜனா­தி­பதி பரிந்­து­ரைத்த போது ஏன் அந்த பரிந்­து­ரையை மீளப்­பெற வேண்டும்.

மேல் நீதி­மன்­றத்தின் பதில் தலைவர் மொஹமட் லபார் நேற்று சேவையில் இருந்து ஓய்­வு ­பெற்­றுள்ளார். ஒரு நாள் பத­வியில் இருப்­ப­தற்­கா­க­வா­வது அவரை உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ர­ச­ராக நிய­மித்­தி­ருக்க வேண்டும். அர­சாங்­கத்தின் இந்த செயற்­பாடு வெறுக்­கத்­தக்­கது.

இந்த அர­சாங்கம் முஸ்லிம் சமூ­கத்­துக்கு பாரி­ய­தொரு அநீதியை இழைத்­துள்­ளது. இந்த அமைச்­ச­ர­வையில் தான் முஸ்லிம் பிரதிநிதிகள் எவருமில்லை. ஆனால் முஸ்லிம் மக்களின் வாக்குகளை முழுமையாக  பெற்றுக்கொண்டார்கள். கொழும்பு மாநகர சபையை சூழ்ச்சியினால் இந்த அரசாங்கம் கைப்பற்றியுள்ளது. இது முஸ்லிம் சமூகத்துக்கு இழைத்த பிறிதொரு அநீதியாகும் என்றார்.- Vidivelli

நன்றி

Leave a Reply

error: Content is protected !!