நாட்டில் , உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், பொலிஸ் துறையில் உள்ள பல உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுடன் இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நடப்பு அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் பொலிஸ் துறையில் தொடர்ந்தும், இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.