இலங்கை, இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா மகளிர் அணிகளுக்கிடையில் முக்கோண கிரிக்கட் தொடரொன்று இடம்பெறவுள்ளது. தொடரின் போட்டிகள் ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ள நிலையில் ரசிகர்கள் போட்டிகளை இலவசமாக பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கட் சபை அறிவித்துள்ளது. ஒவ்வொரு அணியும் தலா 4 போட்டிகளுக்கு முகம்கொடுக்கவுள்ளன. இதில் அதிக புள்ளிகளைப் பெறும் இரு அணிகள் இறுதிப் போட்டியில் மோதும். மே மாதம் 11ம் திகதி இறுதிப் போட்டி இடம்பெறும். .
The post அனுமதி இலவசம் appeared first on ITN News.