இலங்கை முஸ்லிம்களின் பொதுச் சொத்துக்களை பாதுகாக்க, நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு

2025, ஏப்ரல் 30- ஆம் திகதி வக்பு சபை கள்-­எ­ளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்­லூரி (கல்­லூரி)யை முஸ்லிம் அறக்­கட்­ட­ளை­யாக (வக்பாக) பதி­யப்­பட வேண்டும் என்ற வர­லாற்று முக்­கி­யத்­து­வ­மிக்க கட்­ட­ளைக்கு எதி­ராக, கல்­லூ­ரியின் முகா­மைத்­துவ சபை மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் தடை உத்­த­ரவு கோரி விண்­ணப்­பித்த மனு 2025.06.16 ஆம் திகதி நிரா­க­ரிக்­கப்­பட்­டது.

வாதி, பிர­தி­வா­தி­களின் வாய்­மூல, எழுத்­து­மூல கடு­மை­யான வாத, பிர­தி­வா­தங்­களை நன்கு அவ­தா­னித்த மேன்­மு­றை­யீட்டு நீதி­ய­ர­சர்கள் மேற்­கூ­றப்­பட்ட மேன்­மு­றை­யீட்டு மனுவை தள்­ளு­படி செய்­ததன் மூலம் வக்பு சபையின் கட்­ட­ளையை உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது.

மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தின் இந்த தீர்ப்பு இலங்கை முஸ்­லிம்­களின் அறக்­கட்­ட­ளைகள், தர்ம நிறு­வ­னங்­களை பாது­காப்­ப­தற்கும், அவை நிறு­வப்­பட்ட இலக்­கு­களை அடை­வ­தற்கும் வழி­வ­குக்கும் ஒரு மைல்­கல்­லாகும்.

மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றில் முன்­வைக்­கப்­பட்ட வாத, பிர­தி­வா­தங்கள் வக்ப் சபையின் கட்­ட­ளையை இரத்துச் செய்­யு­மாறு வலி­யு­றுத்­திய வாதி தரப்பில் ஆஜ­ரான பிர­பல சட்­டத்­த­ரணி தனது பக்க நியா­யத்தை பின்­வ­ரு­மாறு முன்­வைத்தார்.

கள்-­எ­ளிய முஸ்லிம் மகளிர் அரபிக் கல்­லூரி 1991ஆம் ஆண்டு 46-ஆம் இலக்க பாரா­ளு­மன்ற சட்­டத்தின் மூலம் கூட்­டி­ணைக்­கப்­பட்­டி­ருப்­பதால், பிறி­தொரு சட்­டத்தின் மூலம் இந்தக் கல்­லூ­ரியை கட்­டுப்­ப­டுத்த, நிர்­வ­கிக்க முடி­யாது. எனவே, 1956 ஆம் ஆண்டின் 51-ஆம் இலக்க வக்ப் சட்­டத்தின் கீழ் இந்தக் கல்­லூ­ரியை பதிவு செய்­யவோ, அல்­லது மேற்­பார்வை செய்­யவோ அதி­காரம் இல்லை என்ற வாதம் மிக ஆணித்­த­ர­மாக முன்­வைக்­கப்­பட்­டது.

பிர­தி­வா­திகள் சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ர­ணிகள் மேற்­படி வாதத்தை தர்­க்க ­ரீ­தி­யா­கவும், சட்­ட­ரீ­தி­யா­கவும் பிழை­யென நிரூ­பித்­தனர். பாரா­ளு­மன்ற சட்­டத்தின் மூலம் கூட்­டி­ணைப்­பது (Incorporation) என்­பதும், பாரா­ளு­மன்ற சட்­டத்தின் மூலம் ஆளப்­ப­டு­வது, நிர்­வ­கிக்­கப்­ப­டு­வது என்­பதும் வெவ்­வே­றா­னவை என்­பதை பல ஆதா­ரங்­க­ளுடன் முன்­வைத்­தனர். கூட்­டி­ணைத்தல் என்­பது ஒரு வகை பதிவு மாத்­தி­ரமே. மாறாக கூட்­டி­ணைக்­கப்­பட்ட ஒரு நிறு­வ­னத்தில் ஏனைய சட்­டங்கள் செல்­லு­ப­டி­யா­காது என்­ப­தற்­கான ஷரத்­துக்கள், பிரி­வுகள் 1991ஆம் ஆண்டு 46 ஆம் இலக்க கூட்­டி­ணைக்­கப்­பட்ட பாரா­ளு­மன்ற சட்­டத்தில் எங்­குமே இல்லை என்ற விடயம் குறித்­துக்­காட்­டப்­பட்­டது.

Wakf Tribunal என்ற மாற்று வழி­முறை (Alternative Remedy) இருக்கும் போது நியா­ய­மான கார­ண­மின்றி அந்த வழி­மு­றையை நாடாது, வாதிகள் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தை நாடி­யதும் பிழை என்ற மூல ஆட்­சே­ப­னை­யையும் (Preliminary objection) முன்­வைத்­தனர்.

மேலும் பிர­தி­வாதித் தரப்பு சட்­டத்­த­ர­ணிகள் 1959ஆ-ம் ஆண்டு ஸ்தாபிக்­கப்­பட்ட கல்­லூரி 1991-ஆம் ஆண்டு தான் மேற்­படி சட்­டத்தின் மூலம் கூட்­டி­ணைக்­கப்­பட்­டது. எனவே இந்த கூட்­டி­ணைப்பு சட்­டத்தின் மூலம் கல்­லூ­ரியின் நோக்கு, இலக்கு, இயல்பு என்­பன போன்ற எது­வுமே மாற­வில்லை என்றும், மாறாக கல்­லூ­ரியை ஸ்தாபித்­த­வர்­களின் உய­ரிய இலக்கு அவ்­வாறே முன்­கொண்டு செல்­லப்­ப­டு­கின்­றது என்றும் குறிப்­பிட்­டனர். வக்ப் உட­மை­யாக இந்தக் கல்­லூரி பதிவு செய்­யப்­ப­டு­வதால் குறிப்­பிட்ட நோக்கம், இலக்கு மேலும் வெளிப்­ப­டை­யா­கவும், பொறுப்­புக்­கூறக் கூடி­ய­தா­கவும் அமை­கின்­றது என்ற ஆணித்­த­ர­மான வாதத்தை முன்­வைத்­தனர்.

மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றின் தீர்ப்பு

மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம், இரு­த­ரப்பு வாதங்­க­ளையும் செவி­ம­டுத்து, பிர­தி­வா­திகள் முன்­வைத்த மூல ஆட்­சே­ப­னையை ஏற்றுக் கொண்டு குறிப்­பிட்ட தடை உத்­த­ரவு மனுவை நிரா­க­ரித்து தீர்ப்­ப­ளித்­தது.

சமூகப் பரப்பில் கள்-­எ­ளிய முஸ்லிம் மகளிர் அரபிக் கல்­லூரி சம்­பந்­த­மாக வக்ப் சபை வழங்­கிய கட்­டளை பற்றி பிழை­யான கருத்­துக்கள் சம்­பந்­தப்­பட்ட சிலரால் பரப்­பப்­ப­டு­கின்­றன. அவை பற்­றிய சில தெளி­வு­களை முன்­வைப்­பது எனது கடமை என நினைக்­கின்றேன்.

ஐயமும் தெளிவும்

1956 ஆம் ஆண்டு முதல் வக்ப் சட்டம் நடை­மு­றையில் இருக்கும் போது, 1959 ஆம் ஆண்டு இந்தக் கல்­லூ­ரியை நிறு­விய ஸ்தாப­கர்கள் ஏன் இதனை வக்ப் சட்­டத்தின் கீழ் பதி­ய­வில்லை?

மேற்­படி வினா­வுக்­கான பதிலை பின்­வ­ரு­மாறு வழங்­கலாம் என நினைக்­கின்றேன்.

1.உள்­ய­தார்த்தம் வெளித்­தோற்­றங்­களை மிகைக்­கின்­றது (Substance prevails over forms) என்­பது மேற்­கத்­தேய சட்­டத்தில் மாத்­தி­ர­மன்றி இஸ்­லா­மிய ஷரீஆ சட்­டத்­திலும் மிக முக்­கி­ய­மான ஓர் அடிப்­படை விதி­யாகும். “செயற்­பா­டுகள் எண்­ணங்­களைக் கொண்டே தீர்­மா­னிக்­கப்­ப­டு­கின்­றன”.

இந்தக் கல்­லூ­ரியை ஸ்தாபித்த ஸ்தாப­கர்­களின் நோக்கம், அவர்கள் அது பற்றி மக்­க­ளிடம் முன்­வைத்த கருத்­துக்கள், கோரிக்­கைகள், கல்­லூ­ரியின் இலக்கு, செயற்­பாடு, உள்­நாட்டு, வெளி­நாட்டு முஸ்­லிம்கள் இக்­கல்­லூ­ரிக்கு வழங்­கிய அங்­கீ­காரம், நன்­கொ­டைகள், அர­சாங்கம் இதற்கு வழங்­கிய சலு­கைகள், வரப்­பி­ர­தா­சங்கள் போன்­ற­வற்றை ஒருவர் நியா­ய­மான திறந்த மன­துடன் முழு­மை­யாக பார்க்கும் போது இது முஸ்லிம் சமூ­கத்தின் பொது நன்­மைக்­காக (Public benefit) அர்ப்­ப­ணிக்­கப்­பட்ட ஒரு அறக்­கட்­டளை (வக்ப் ) என்­பதைப் புரிந்து கொள்வர்.

2. ஸ்தாப­கர்­களின் கூட்டுப் பிர­க­டனம்: கல்­லூ­ரியை ஸ்தாபித்த ஸ்தாபகர்கள் ஐவரும் ஒன்­றாக இலங்கை முஸ்லிம் சமூ­கத்­திடம் 23.07.1961 திக­தி­யிட்ட பகி­ரங்க நிதி உத­வி­கோரல் படி­வத்தில் இது ஒரு வக்ப் உடமை என்­பதை மிகத் தெளி­வாக குறிப்­பிட்­டுள்­ளனர்.

3.அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட அறக்­கட்­டளை: இலங்கை முஸ்­லிம்கள் மாத்­தி­ர­மன்றி உல­க­ளா­விய முஸ்­லிம்­களும் மேற்­படி கோரிக்­கையை ஏற்று மிகப் பெரும் தொகையை நன்­கொ­டை­யாக கல்­லூ­ரிக்கு வழங்­கினர். அன்­றி­ருந்த அர­சாங்­கமும் இந்தக் கல்­லூ­ரிக்கு பலரும் நன்­கொடை வழங்க வேண்டும் என்ற உயர் நோக்கில் இந்த கல்­லூ­ரியை அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட அறக்­கட்­ட­ளை­யாக 28.03.1964 ஆம் ஆண்டு 13998 ஆம் இலக்க வர்த்­த­மானி மூலம் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யது. இந்தப் பிர­க­டனம் மூலம் கல்­லூ­ரிக்கு வழங்­கப்­படும் நன்­கொ­டை­க­ளுக்கு வரிச் சலுகை வழங்­கப்­ப­டு­கி­றது. இன்றும் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட அறக்­கட்­ட­ளை­யாக (Approved Charitable Institution) இக்­கல்­லூரி திகழ்­கின்­றது.

4. நல்­லெண்ண செயற்­பாடு: நன்­மை­யான ஒரு விட­யத்தை ஒரு­வரோ, பலரோ இணைந்து ஆரம்­பிக்கும் போது, அங்கே பிரச்­சி­னைகள், சர்ச்­சைகள் தோன்­றலாம் என எதிர்­ம­றை­யாக சிந்­திப்­பதை விட நல்­லெண்ண அடிப்­ப­டை­யிலே அதனை முன்­கொண்டு செல்­கின்­றனர். அவ்­வாறே 1956-ன் 51-ம் இலக்க வக்ப் சட்­டத்தின் கீழ் ஒரு முஸ்லிம் அறக்­கட்­டளை கட்­டாயம் பதி­யப்­பட வேண்டும் என்ற நிபந்­தனை இல்லை. ஆனால் எதிர்­கால நலனை கருத்தில் கொண்டு தூர­நோக்­குடன் அதனை ஸ்தாபகர்கள் பதிவு செய்­தி­ருந்தால் இவ்­வா­றான சர்ச்­சைகள், சீர்­கே­டுகள் இடம்­பெற்­றி­ராது, அல்­லது பிற்­பட்ட காலத்தில் அந்த அறக்­கட்­ட­ளைக்கு ஒரு பாதிப்பு இடம்­பெ­றலாம் என சம்­பந்­தப்­பட்ட முஸ்லிம் சமூக உறுப்­பி­னர்கள் கரு­து­வ­தாயின் அதனை வக்­பாக பதிவு செய்ய வக்ப் சட்­டத்தில் இடம் இருக்­கின்­றது.

இந்தக் கல்­லூ­ரியும் ஆரம்­பிக்­கப்­பட்ட முதல் இரண்டு தசாப்­தங்­களில் சுமு­க­மாக செயற்­பட்­டது. அப்­போது வக்ப் சட்­டத்தின் தலை­யீடோ அல்­லது ஒரு இறுக்­க­மான சட்­ட­மு­றை­மையோ தேவைப்­ப­ட­வில்லை. 1980 களில் ஏற்­பட்ட சர்ச்­சையின் விளை­வா­கத்தான் 1991-ன் 46-ம் இலக்க கூட்­டி­ணைக்­கப்­பட்ட சட்டம் கொண்­டு­வ­ரப்­பட்­டது. (இது பற்றி பின்னர் விளக்­கு­கின்றேன்.) 2020 களில் முஸ்லிம் சமூ­கத்தின் பொதுச் சொத்­தான இந்தக் கல்­லூ­ரியின் இருப்­புக்கு ஏற்­பட்ட அச்­சு­றுத்தல், முஸ்லிம் சமூ­கத்தின் அறக்­கட்­ட­ளை­களை பாது­காப்­ப­தற்­காக தீர்க்­க­த­ரி­ச­னத்­துடன் எமது முன்­னோர்­களால் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள வக்ப் சபையின் தலை­யீட்டை வேண்­டி­நின்­றது.

கல்­லூ­ரியின் 1991-ன் 46-ம் இலக்க கூட்­டி­ணைப்பு சட்டம் ஏனைய

சட்­டங்­களை மிகைக்­கின்­றதா?

வக்ப் சட்­டத்தின் கீழ் இந்தக் கல்­லூ­ரியை பதிவு செய்ய முடி­யாது என்­ப­தற்கு வாதி தரப்­பி­னரால் முன்­வைக்­கப்­பட்ட வாதத்­திற்கு பிர­தி­வாதி தரப்பால் முன்­வைக்­கப்­பட்ட பதில் வாதங்கள் ஆரம்­பித்தில் குறிப்­பி­டப்­பட்­டன.

பாரா­ளு­மன்ற சட்­டத்தின் மூலம் கூட்­டி­ணைக்­கப்­பட்ட இந்த கல்­லூ­ரியில் பிற சட்­டங்கள் செல்­லு­ப­டி­யா­காது என்ற வாதம் தர்க்கரீதி­யான உண்மை என்­றி­ருப்பின், அந்த விடயம் மிகத் தெளி­வாக அதில் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்க வேண்டும் என்­பது சட்­டத்­துடன் ஓர­ள­வுக்­கேனும் பரிச்­சயம் உள்­ள­வர்­க­ளுக்கு புரியும்.

பாரா­ளு­மன்ற சட்­டத்தின் மூலம் கூட்­டி­ணைக்­கப்­பட்ட இந்தக் கல்­லூரி பிற சட்­டங்கள் நுழைய முடி­யாத தன்­னி­றைமை கொண்ட ஒரு சிற்­ற­ர­சாக சிலர் கற்­பனை செய்­கின்­றனர். பாரா­ளு­மன்ற சட்­டத்தின் மூலம் கூட்­டி­ணைக்­கப்­பட்ட இந்தக் கல்­லூ­ரியில் பாரா­ளு­மன்­றத்­தினால் இயற்­றப்­பட்ட அனைத்து சட்­டங்­களும் (விதி­வி­லக்கு அளிக்­கப்­பட்­டி­ருக்­கா­விட்டால்) செல்­லு­ப­டி­யாகும். அதனால் தான் இங்கு சேவை புரி­கின்ற ஊழி­யர்­க­ளுக்­கான சேம­லாப (EPF), நம்­பிக்கை(ETF) போன்­ற­வைகள் செலுத்­தப்­ப­டு­கின்­றன.

கூட்­டி­ணைக்­கப்­பட்ட சட்­டத்தின் பின்­னணி

கூட்­டி­ணைக்­கப்­பட்ட சட்டம் அமு­லுக்கு வந்த பின்­னணி, அதன் அமு­லாக்கம் பற்றி சில விளக்­கங்­களை வழங்­கு­வது, இப்­பி­ரச்­சி­னையை மிகத் தெளி­வாக புரிந்து கொள்ள உதவும் என நினைக்­கின்றேன்.

1980களில் இது­போன்ற ஒரு சர்ச்சை நிதி­மு­றை­கேடு சம்­பந்­த­மாக தோன்றி அது கம்­பஹா நீதி­மன்றம் (Case No. 24417/M) வரை சென்­றது. அதனைத் தொடர்ந்து, இவ்­வா­றான முறை­கே­டுகள் கல்­லூ­ரியில் இடம்­பெறக் கூடாது என்­ப­தற்­காக அன்­றி­ருந்த நிர்­வா­கி­களும், முஸ்லிம் தலை­வர்­களும் இணைந்து கல்­லூ­ரியை 1991-ன் 46-ம் இலக்க சட்­டத்தின் மூலம் கூட்­டி­ணைத்­தனர்.

இந்த கூட்­டி­ணைப்பு சட்­டத்தின் பிரிவு 4-ன் பிர­காரம் கல்­லூ­ரிக்­கான சட்­ட­யாப்பு (Rule) உரு­வாக்­கப்­பட்­டது. அந்த சட்­ட­யாப்பின் ஷரத்து 4-ன் படி 21 வய­திற்கு மேற்­பட்ட முஸ்லிம் ஆண்­களைக் கொண்ட ஓர் சொஸைட்டி (Society) உ­ரு­வாக்­கப்­பட வேண்டும், ஷரத்து 9-ன் பிர­காரம் வரு­டாந்த பொதுக்­கூட்­டத்தில் கணக்­க­றிக்­கைகள் சமர்ப்­பிக்­கப்­பட்டு அங்­கீ­க­ரிக்கப்படு­வ­தோடு, மூன்று வரு­டங்­க­ளுக்கு ஒரு முறை முகா­மைத்­துவ சபை தெரிவு செய்­யப்­படல் வேண்டும் எனக் கூறப்­பட்­டுள்­ளது.

இங்கு ஆச்­ச­ரி­யப்படத்­தக்க விடயம் என்­ன­வெனில் இந்தக் கல்­லூரி பாரா­ளு­மன்றத்­தினால் கூட்­டி­ணைக்­கப்­பட்­டி­ருப்­பதால், பிற வக்ப் சட்டம் இதில் தலை­யிட முடி­யாது, 1991-ன் 46-ம் இலக்க கூட்­டி­ணைப்பு சட்­டமே அமு­லா­கின்­றது எனக் கூறும் “நிர்­வா­கத்­தினர்” கூட்­டி­ணைப்பு சட்­டத்­தையே ஒரு தூசுக்­கேனும் மதி­யாமல் அதனை முழு­மை­யாக புறக்­க­ணித்து வரு­வ­தாகும்.

கூட்­டி­ணைக்­கப்­பட்ட சட்டம் அமு­லுக்கு வந்து 35 வரு­டங்கள் கடந்து போனாலும் கூட, ஐந்து ஸ்தாபக உறுப்­பி­னர்­களுள் ஒரு ஸ்தாபக உறுப்­பி­னரின் குடும்ப அங்­கத்­த­வர்­களின் ஆட்­சியும் அதி­கா­ரமும் கோலோச்சு­கின்­றது. இது வரை கூட்­டி­ணைப்பு சட்­டத்­திலோ, சட்­ட­யாப்­பிலோ குறிப்­பி­டப்­பட்ட பிர­காரம் சொஸைட்­டியோ, வரு­டாந்த பொதுக்­கூட்­டங்­களோ வெளிப்­ப­டை­யா­கவும் பொறுப்­புக்­ கூ­ற­லுடன் இடம்­பெ­ற­வில்லை.

அவ்­வாறு இடம்­பெற்­றி­ருப்பின் இன்று தோன்­றி­யுள்ள சர்ச்­சை­களோ, நீதி­மன்­றங்­க­ளிடம் சென்று நீதி கோர­வேண்­டிய அவ­சி­யமோ அல்­லது வக்ப் சபையில் இந்தக் கல்­லூ­ரியை வக்ப் ஆக பதி­யுங்கள் என்று மன்­றாட வேண்­டிய தேவையோ ஏற்­பட்­டி­ருக்­காது.

கூட்­டி­ணைக்­கப்­பட்ட சட்டம் வக்ப்

சட்­டத்­துடன் இயைந்­து­செல்­கின்­றது

கல்­லூ­ரியின் கூட்­டி­ணைக்­கப்­பட்ட சட்­டமும், வக்ப் சபையின் மூலம் பதிவு செய்­யப்­படும் ஒரு முஸ்லிம் அறக்­கட்­டளை அல்­லது முஸ்லிம் தர்ம நிதி­யமும் பெரும்­பாலும் ஒரே இலக்கை அடிப்­ப­டை­யாகக் கொண்­ட­தாகும். குறிப்­பிட்ட நிறு­வனம் தனது இலக்கை, நோக்­கத்தை வெளிப்­ப­டை­யா­கவும், பொறுப்­புக்­கூறக் கூடி­ய­தாவும் பய­ணிக்க வேண்டும் அதனை உறுதிசெய்ய வேண்டும். ஆனால் கல்லூரியின் நிர்வாகத்தினர் அதற்கு மாற்­ற­மாக செயற்­பட்­டதன் கார­ண­மாக குறிப்­பிட்ட கூட்­டி­ணைப்பு சட்­டத்தின் அடிப்­ப­டையில் மாவட்ட நீதிமன்றத்திலும், முஸ்லிம் அறக்கட்டளை என்றவகையில் வக்ப் சட்டத்தின் கீழும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

முஸ்லிம் பொது நிறுவனங்களைப் பாதுகாப்பது சமூகத்தின் கடமை

இலங்கையில் காணப்படும் அதிகமான முஸ்லிம் அறக்கட்ட ளைகள், பொது நிறுவனங்கள் ஒரு சில தனிநபர்களால் ஸ்தாபிக்க ப்பட்டாலும், அதன் பௌதீக, தார்மீக, அறிவுசார் வளர்ச்சிக்கு பலரது பங்களிப்பு நேரடி, மறைமுக காரணிகளாக அமைந்துள்ளன. இந்தப் பின்னணியிலும் மேற்போந்த அறநிலையங்களை தனியார் உடமை என்றோ பொது உடமையன்று என்றோ வாதிக்க முடியாது. கவலைக்குரிய விடயம் என்னவெனில், இவ்வாறான முஸ்லிம் பொது அறநிலையங்கள் அதனை நிர்­வ­கிக்கும் ஸ்தாப­கர்­களின் வாரி­சு­க­ளாலும், மற்ற நிர்­வா­கி­க­ளாலும் துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­ப­டு­கின்­றன.

1956-ன் 51-ம் இலக்க வக்ப் சட்­டத்தில் அவ­ச­ர­மா­கவும், அவ­சி­ய­மா­கவும் கொண்­டு­வர வேண்­டிய பல திருத்­தங்கள் இருப்­பினும் கூட, எமது முஸ்லிம் அறக்­கட்­ட­ளை­களை பாது­காப்­ப­தற்­கு­ரிய சிறந்த பொறி­முறை வக்ப் சட்­டத்தின் கீழ் வக்ப் ஆக பதி­வ­தாகும். சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் தமது பொறுப்பை, கட­மையை நிறை­வேற்­றா­விட்டால் முஸ்லிம் சமூ­கத்தின் சாபத்­திற்கு மாத்திரமன்றி, இறை கோபத்திற்கும் உட்படவேண்டிவரும்.

– Vidivelli –

 என்.எம்.எம்.மிஃலி (நளீமி)

முன்னாள் பிரதி ஆணையாளர் நாயகம் – உள்நாட்டு இறைவரித் திணைக்களம்

நன்றி

Leave a Reply

error: Content is protected !!