ஈரான் மீது மீண்டும் குண்டு வீச வேண்டாம் என்று இஸ்ரேலிடம் டிரம்ப் கூறியுள்ளார். ஈரானிய போர் நிறுத்த மீறலுக்கு பதிலளிக்கும் விதமாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சகம் ‘தீவிரமான தாக்குதல்களுக்கு’ திட்டங்களை அறிவித்ததை அடுத்து, அமெரிக்க ஜனாதிபதி ஈரான் மீது மற்றொரு தாக்குதலை நடத்துவதற்கு எதிராக இஸ்ரேலுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல். அந்த குண்டுகளை வீசக் கூடாது. நீங்கள் அப்படிச் செய்தால், அது ஒரு பெரிய மீறல். உங்கள் விமானிகளை இப்போதே வீட்டிற்கு அழைத்து வாருங்கள் என என்று டிரம்ப் ட்ரூத் சோஷியலில் எழுதியுள்ளதாக Aljazeera தகவல் வெளியிட்டுள்ளது.