நியூ டெஹ்ரி: உத்தரகாண்டில் ஆற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் மாயமாகி விட்டனர். உத்தரகாண்ட் மாநிலம் பரிதாபாத் மாவட்டத்தில் இருந்து சாமோலி மாவட்டத்தில் உள்ள கவுச்சாருக்கு 6 பேர் எஸ்யூவி காரில் நேற்று சென்று கொண்டிருந்தனர். நேற்று காலை 6 மணிக்கு பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பக்வான் கிராமத்துக்கு அருகே சென்று கொண்டிருந்த கார் திடீரென்று அருகிலுள்ள அலக்நந்தா ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மீட்பு மற்றும் காவல்துறையினர் ஆற்றில் தத்தளித்து கொண்டிருந்த ஒரு பெண்ணை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மாயமான 5 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post உத்தரகாண்ட் ஆற்றில் கார் கவிழ்ந்து 5 பேர் மாயம் appeared first on Dinakaran.