18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் கவுகாத்தியில் இரவு 7.30 மணிக்கு அரங்கேறும் போட்டில் 5 முறை சம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ரோயல்சை எதிர்கொள்ளவுள்ளது.
கடந்த போட்டியில் ஏற்பட்ட சறுக்கலை மறந்து நல்ல நிலைக்கு திரும்ப சென்னை அணி தீவிரம் காட்டும் அதேநேரத்தில் முதல் 2 ஆட்டங்களில் கண்ட தோவ்வியால் துவண்டு போய் இருக்கும் ராஜஸ்தான் அணி எழுச்சி பெற்று வெற்றி கணக்கை தொடங்க எல்லா வகையிலும் முயற்சிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இவ்விரு அணிகளும் இதுவரை 29 முறை மோதி இருக்கின்றன. இதில் சென்னை 16 ஆட்டத்திலும்,ராஜஸ்தான் 13 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன. கடைசியாக நடந்த 5 ஆட்டங்களில் 4-ல் ராஜஸ்தான் வென்றுள்ளது நினைவுகூரத்தக்கது.
இதேவேளை முன்னதாக மாலை 3.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடைபெறும் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ், முன்னாள் சம்பியனான ஐதராபாத் சன் ரைசர்சை சந்திக்கிறது.
ஐதராபாத் அணியின் அதிரடியை தடுப்பதை பொறுத்தே டெல்லி அணியின் வெற்றி வாய்ப்பு அமையும். இவ்விரு அணிகளும் இதுவரை 24 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 13-ல் ஐதராபாத்தும், 11-ல் டெல்லியும் வெற்றி கண்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.