காஞ்சியில் மழை, வெயிலில் வீணாகும் கடைகள்: சாலையோர வியாபாரிகளுக்கு பயன்படுமா? | Shops that are ruined by rain and sun in Kanchipuram

​காஞ்​சிபுரம் மாநக​ராட்​சி​யில் மாற்​றுத் திற​னாளி​கள், ஆதர​வற்​றவர்​கள் சாலை​யோரத்​தில் கடைகளை வைத்து நடத்​து​வதற்​காக மாநக​ராட்சி மூலம் வாங்​கப்​பட்ட ஆயத்த கடைகள் பயன்​படுத்​தப்​பாடமல் காஞ்​சிபுரம் பேருந்து நிலை​யத்​தில் மழை​யிலும், வெயி​லிலும் போட்டு வைக்​கப்​பட்​டுள்​ளன.

காஞ்​சிபுரம் நகராட்சி கடந்த 2022-ம் ஆண்டு மாநக​ராட்​சி​யாக தரம் உயர்த்​தப்​பட்​டது. இதனை தொடர்ந்து அந்த மாநக​ராட்சி மூலம் சாலை​யோரத்​தில் உடல் ஊனமுற்​றோர், விதவை​கள், கணவ​னால் கைவிடப்பட்டோர் போன்​றோர் கடை வைப்​ப​தற்​கும், அவர்​களுக்கான வாழ்வாதாரத்தை உறுதி செய்​ய​வும் 50 ஆயத்த கடைகள் வாங்​கப்​பட்​டன. தாம்​பரம் மாநக​ராட்​சிக்கு அரசு மூலம் வழங்​கப்​பட்ட இந்த கடைகளில் மிகு​தி​யாக இருந்​தவை காஞ்​சிபுரம் மாநக​ராட்​சிக்கு எடுத்து வரப்​பட்​டன.

இரும்​பால் செய்​யப்​பட்ட இந்த கடைகளை சாலை​யோரங்​களில் வைத்து பயன்​படுத்​தும் வகை​யில் உள்​ளன. இந்த கடைகளை வழங்​கு​வதற்​காக முதல்​கட்​ட​மாக 25 பயனாளி​கள் தேர்வு நடை​பெற்​றது ஆனால் இந்த நடவடிக்​கைகள் ஓராண்டை கடந்த நிலை​யில் கடைகள் இன்​னும் யாருக்​கும் ஒப்​படைக்​கப்​பட​வில்​லை.

முதலில் இந்த 50 கடைகளும் காஞ்​சிபுரம் அண்ணா அரங்​கில் வைக்​கப்​பட்​டிருந்​தன. ராணுவத்​துக்கு ஆள்​சேர்ப்பு முகாம் நடை​பெறும்​போது பலர் அங்கு தங்​கிய​தால் அங்​கிருந்த கடைகள் தற்​போது காஞ்​சிபுரம் பேருந்து நிலை​யத்​தில் உத்​திரமேரூர் பேரூந்​துகள் நிற்​கும் இடத்​துக்கு அருகே வைக்​கப்​பட்​டுள்​ளன. கழி​வறைக்கு அருகே இந்த கடைகளை வைத்​திருந்​தப்​பது பலரை முகம் சுளிக்க வைத்​துள்​ளது. மழை​யிலும், வெயி​லிலும் இருப்​ப​தால் கடைகள் வீணாகி வரு​கின்​றன.

இது குறித்து சமூக ஆர்​வலர் கிருஷ்ண​மூர்த்​தி​யிடம் கேட்​ட​போது, உண்​மை​யில் இந்த ஆயத்த கடைகள் வழங்​கும் திட்​டம் நல்ல திட்​டம். இதன் மூலம் வரு​மானம் இல்​லாமல் தவிக்​கும் மாற்​றுத்​திற​னாளி​கள், விதவை​கள், கணவ​னால் கைவிடப்​பட்​ட​வர்​களுக்கு முக்​கி​யத்​து​வம் அளித்து இந்த கடைகள் வழங்க திட்​ட​மிட்​ட​தாக கூறப்​படு​கிறது. திட்​டங்​களை சரி​யாக வகுத்து முறை​யாக செயல்​படுத்​த​வில்​லை. இந்த கடைகள் பயனாளி​களுக்கு வழங்​கப்​ப​டா​மல் பேருந்து நிலை​யம் அருகே வைத்து வீணாகி வரு​கின்​றன. உடனடி​யாக இந்த கடைகளை சரி​யான பயனாளி​களை தேர்வு செய்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்​றார்.

இது குறித்து காஞ்​சிபுரம் மாநக​ராட்சி தலைமை பொறி​யாளர் கணேஷிடம் கேட்​ட​போது இது குறித்து காஞ்​சிபுரம் மாநக​ராட்சி நிதி பிரி​வில்​தான் கேட்க வேண்​டும். கடைகளை விரை​வில் பயனாளி​களுக்கு வழங்க அவர்​களிடம் தெரிவிக்​கிறேன் என்​றார். இது குறித்து நிதிப் பிரிவு அதி​காரி​யிடம் கேட்​ட​போது அந்த கடைகளை பல ஆண்​டு​களாக அப்​படியே வைத்​துள்​ளனர். அதனை மாநக​ராட்சி கவுன்​சிலிடம் உரிய அனு​மதி பெற்று பயனாளி​களுக்​கு வழங்​கு​வதற்​கான நடவடிக்​கைகள்​ எடுக்​கப்​படும்​ என்​றார்​.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!