0
தோஹா: கத்தாரைச் சேர்ந்த 28 இந்தியர்கள் கொண்ட குழு கென்யாவிற்கு சென்றது. அவர்கள் பயணம் செய்த பேருந்து நேற்று துரதிர்ஷ்டவசமாக சாலை விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 5 இந்தியர்கள் பலியானார்கள். விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் நைரோபியில் உள்ள இந்திய உயர் தூதரக அதிகாரிகள் மீட்புப் பணியில் ஈடுபட்டு, பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்தனர். இந்த விபத்து கென்யாவில் உள்ள நியாண்டருவா கவுண்டியில் ஓல் ஜோரோரோக்-நகுரு சாலையில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்திய தூதரகம் செய்துள்ளது. இந்த விபத்தில் பலியானவர்கள் தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் என்று கென்யா தரப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும், இறந்தவர்கள் குறித்த அடையாளம் இன்னும் வெளியிடப்படவில்லை.