கொலம்பியாவில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இதுவரை 25பேர் உயிரிழப்பு!

கொலம்பியாவின் மலை பிரதேசமான பெல்லோவில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் மண்சரிவில் சிக்கி இதுவரை  25 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, குறித்த மண்சரிவில் மலை மீது கட்டப்பட்டிருந்த குடியிருப்பு கட்டுமானங்கள் உள்ளிட்டவை அடித்து செல்லப்பட்டன.

இதுகுறித்து தகவலறிந்த பேரிடர் மீட்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களை மீட்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த மண்சரிவில் மண்ணுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களில் 10 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த மண்சரிவில் பலர் காணாமல் போயுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் எனவும் அஞ்சப்படுகிறது.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!