கொழும்பு துறைமுக நகரத்தில் உள்ள செயற்கைக் கடலில் குளித்தபோது, பல்கலைக்கழக மாணவர் ஒருவர் (24 வயது), நேற்று வியாழக்கிழமை (26) காணாமல் போனதை அடுத்து, கொழும்பு பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
கம்பஹாவைச் சேர்ந்த அந்த மாணவர், கொழும்பு மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் குழுவுடன் அங்கு வந்திருந்தாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நீருக்கடியில் நீந்துவதற்கும், பார்ப்பதற்கும் ஒரு பிரபலமான “ஸ்நோர்கெலிங்” நீர் விளையாட்டுக்கு வந்திருந்த நிலையில், இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்தில் இருந்த உயிர்காப்பாளர்கள் காணாமல் போன மாணவரின் ஸ்நோர்கெலிங் கருவியை மீட்டதுடன், மாணவனை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அத்துடன், மாணவனைக் கண்டுபிடிக்க பொலிஸார் மற்றும் இலங்கைக் கடற்படை இணைந்து ஒரு கூட்டு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.