சுவிஸ் தூதரை ஈரான் அழைக்க காரணம் என்ன..?

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, சுவிஸ் தூதரை அழைத்து எச்சரித்துள்ளது ஈரான். தாக்கியது இஸ்ரேல், அதற்கு ஆதரவளிப்பதாக ஈரான் கோபப்படுவது அமெரிக்கா மீது. அப்படியிருக்கும்போது, ஈரான் எதற்காக சுவிஸ் தூதரை அழைத்து எச்சரித்துள்ளது?

சுவிஸ் தூதரை ஈரான் அழைக்க காரணம் என்ன..?

அதாவது, 1980ஆம் ஆண்டு நிகழ்ந்த ஈரான் புரட்சி, மற்றும் ஈரானிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் 66 அமெரிக்கர்கள் பிணைக்கைதிகளாக ஈரானால் பிடித்துவைக்கப்பட்ட சம்பவம் ஆகிய நிகழ்வுகளுக்குப் பிறகு, அமெரிக்கா ஈரானுடன் தூதரக உறவுகள் வைத்துக்கொள்வதில்லை. 

ஆகவே, சுவிட்சர்லாந்து ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவுக்காக அதிகாரப்பூர்வ பிரதிநிதியாக செயல்பட்டுவருகிறது.  ஆகவேதான், இஸ்ரேல் ஈரான் தாக்கியதும், இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பது குறித்து அமெரிக்காவை எச்சரிப்பதற்காக, ஈரான் தரப்பு சுவிஸ் தூதரை அழைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!