டெஸ்ட் அணித் தலைவர் பதவியிலிருந்து ஷன்டோ விலகிக்கொண்டுள்ளார்!

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 0 – 1 என்ற ஆட்டம் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததை அடுத்து பங்களாதேஷ் டெஸ்ட் அணித் தலைவர் பதவியிலிருந்து நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ விலகிக்கொண்டுள்ளார்.

இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் எஸ்.எஸ்.சி. விளையாட்டரங்கில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி முடிவில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது தனது முடிவை ஷன்டோ அறிவித்தார்.

போட்டியில் இலங்கையிடம் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 78 ஓட்டங்களால் பங்களாதேஷ் தோல்வி அடைந்தது.

இதற்கு மேலும் டெஸ்ட் அணித் தலைவர் பதவியில் தொடர தான் விரும்பிவில்லை என தெரிவித்து ஷன்டோ பதவியிலிருந்து விலகியுள்ளார்.

இதேவேளை, இது தனிப்பட்ட நலனுக்காக எடுத்த முடிவல்ல எனவும் அணியின் நலனையும் முன்னேற்றத்தையும் கருத்திக்கொண்டே தான் இந்த முடிவை எடுத்ததாகவும் , முன்று வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கு மூன்று தலைவர்கள் இருப்பது பொருத்தமல்ல எனவும் இது குறித்து கிரிக்கெட் சபையின் தீர்மானத்தை ஆதரிப்பேன் எனவும் ஷன்டோ மேலும் தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!