டேன் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு!

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சமூக மற்றும் அரசியல் செயற்பாட்டாளரான   டேன் பிரியசாத்  ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில்  அனுமதிக்கப்பட்டுள்ளார் என  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று இரவு 9.10 மணியளவில்  இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் வெல்லம்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மேல் மாடியில் வைத்து  அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டில் மற்றுமொரு நபர் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!