தாய்வான் பகிரங்க மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடரில் சமோத் யோதசிங்க மூன்றாமிடம்!

தாய்வான் பகிரங்க மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை வீரர் சமோத் யோதசிங்க வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

தாய்வானில் இடம்பெற்றுவரும் பகிரங்க மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடரின் 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் இலங்கை வீரர் சமோத் யோதசிங்க பங்கேற்றிருந்தார்.

தாய்வான் பகிரங்க மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடரின் 100 மீற்றர் ஆடவர் ஓட்டப்போட்டி இன்று (08) இடம்பெற்றது.

இதில் இலங்கை வீரர் சமோத் யோதசிங்க 100 மீற்றர் ஓட்டப்போட்டியை 10.38 செக்கன்களில் நிறைவு செய்து மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்த வெற்றியின் ஊடாக இலங்கை வீரர் சமோத் யோதசிங்க வெண்கல பதக்கத்தினை வென்றுள்ளார்.

 

நன்றி

Leave a Reply

error: Content is protected !!