துருக்கியைச் சேர்ந்த மணமகள் ஒருவர், காசாவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதற்காக, சுமார் $40,000 மதிப்புள்ள தனது திருமண நகைகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளாத அவர், தனது திருமணம் நம்பிக்கை மற்றும் கருணையின் அடையாளமாக இருக்க வேண்டும் என்று விரும்புவதாக குறிப்பிட்டுள்ளதுடன், இந்த கடினமான காலங்களில் காசாவில் உள்ள மக்களுக்கு இரக்கம் காட்ட மற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில், தனது செயல் அமைய வேண்டும் என்று விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.