நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றில் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த ஆவணப்படத்தின் டிரெய்லர் வெளியானபோது, அதில் ‘நானும் ரவுடி தான்‘ படத்தின் மூன்று நிமிட படப்பிடிப்பு காட்சிகள் இருந்தன.
இது தொடர்பாக தனுஷின் வுண்டர்பார்ஸ் நிறுவனம் 10 கோடி இந்திய ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணை சென்னை நீதிமன்றில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்திற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. சந்திரமுகி காட்சிகளை ஆவணப்படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று ஏபி இண்டர்நெஷனல் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
இது தொடர்பாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட சென்னை நீதிமன்றம் வழக்கின் விசாரணையைத் தள்ளி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.