நாடாளுமன்றம் ஒத்திவைப்பு! – Athavan News




நாடாளுமன்றம் ஒத்திவைப்பு! – Athavan News































நாடாளுமன்ற அமர்வுகள் இன்று பிற்பகல் 5.30 மணி வரை நடைபெறவிருந்த நிலையில், நாளை காலை 9.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஈரான் – இஸ்ரேல் மோதலின் தாக்கத்தினால் இலங்கைக்கு ஏற்படவுள்ள பாதிப்புகள் தொடர்பிலான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற்ற நிலையிலேயே இவ்வாறு நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா, இந்த விவாதத்திற்கான ஒத்திவைப்பு தீர்மானத்தை சபையில் முன்வைத்திருந்தார், ஆனால் இன்று (18) பிரேரணை விவாதிக்கப்பட்டபோது அவர் நாடாளுமன்றில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இன்றைய நாடாளுமன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து செல்ல முடியாததால் நாளை (19) காலை 9.30 வரை நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதாக பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி அறிவித்தார்.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!