ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, ஜெர்மனிக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு,ஞாயிற்றுக்கிழமை (15) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.
அவருடன் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் இலங்கை முதலீட்டு வாரியத்தின் தலைவர் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.