வடமாகாண விவசாய ஆராய்ச்சி நிலைய ஊழியர்கள் இன்று கிளிநொச்சி இரணைமடுச் சந்தியில் உள்ள விவசாய ஆராய்ச்சி நிலையம் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரியே விவசாய ஆராய்ச்சி நிலைய ஊழியர்கள் குறித்த போராட்டத்தினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.