பகிடிவதையால் ஆற்றில் குதித்த மாணவி; நான்கு மாணவர்கள் கைது 


குளியாப்பிட்டி தொழில்நுட்பக் கல்லூரியில் கல்விகற்கும் முதலாம் ஆண்டு மாணவி, ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தை அடுத்து, நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கல்லூரிக்கு அருகிலுள்ள ஆற்றில் குறித்த மாணவி நேற்று (02) மதியம் குதித்த நிலையில், அருகில் இருந்த சிலரால் அவர் மீட்கப்பட்டு குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

மாணவி தற்போது குளியாப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து, நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குளியாப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

நன்றி

Leave a Reply

error: Content is protected !!