ஈரானின் அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா குண்டுவீசிய பிறகு, பஹ்ரைன் அனைத்து பொது தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆன்லைன் கற்றலுக்கு மாற அறிவுறுத்தல்களை வெளியிட்டதுடன், பொதுநிறுவன ஊழியர்கள் 70 சதவீதமானவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யவும் அனுமதியளித்துள்ளது.
மக்கள் பயணத்தை மட்டுப்படுத்தி, பிரதான சாலைகளை “தேவைப்படும்போது மட்டுமே” பயன்படுத்துமாறு உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.