ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு தலிபான்களுக்கு ஐ.நா வலியுறுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள் அங்கு பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். குறிப்பாக பெண்கள் கல்வி கற்பதற்கும் தடை விதித்துள்ளனர்.
இந்நிலையில் ‘மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்கானிஸ்தானில் பெண்கள் குழந்தைகளின் உரிமைகள் மீறப்பட்டு வருவதாகவும், அனைத்து பெண் பிள்ளைகளும் பாடசாலை செல்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் எனவும், திறமையான, புத்திசாலியான இளம் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டால் அதன் விளைவுகள் பல தலைமுறைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் ஐநா வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.