பெண் மருத்துவர் மீதான பாலியல் பலாத்காரம் – பிரதான சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்!

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் பாதிக்கப்பட்ட பெண்ணால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் தலைமை நீதிவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய முன்னிலையில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பின் போது பாதிக்கப்பட்ட மருத்துவர் சந்தேக நபரை அடையாளம் கண்டார்.

அனுராதபுரம் தலைமை நீதிவானின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (28.03.25) அடையாள அணிவகுப்பு நடைபெற்றது.

கடந்த மார்ச் 10 ஆம் திகதி சந்தேக நபரால் கத்தி முனையில் தடுத்து வைக்கப்பட்ட பின்னர், அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ குடியிருப்பிற்குள் பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார்.

சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த நபர் பெண் மருத்துவரின் மொபைல் போனுடன் தப்பிச் சென்றுள்ளார்.

மறுநாள் கல்னேவ பகுதியில் அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

திருடப்பட்ட கையடக்க தொலைபேசியை பின்தொடர்வதன் மூலம் காவல்துறையினர் அவரைக் கண்டுபிடிக்க முடிந்தது.

இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவ ஊழியர்கள் ஒரு அடையாள வேலைநிறுத்தத்தை மேற்கண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!