2
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (30.05.25) 10.3 கிலோ கோகைனுடன் வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவற்துறையினரின் கூற்றுப்படி, சந்தேக நபர் மூன்று பொம்மைகளுக்குள் போதைப்பொருட்களை மறைத்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவற்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் விமான நிலைய சுங்கப் பிரிவு அதிகாரிகள் நடத்திய கூட்டு சோதனையின் போது அவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் 38 வயதுடைய இத்தாலிய நாட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காவற்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.