நாட்டின் தென்மேற்குப் பகுதியில் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பானது நாளை பிற்பகல் 2 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், நாட்டின் தென்மேற்குப் பகுதிகளிலும் அடுத்த சில நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்யக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.