இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் செவ்வாயன்று (18)வெளியிட்ட அட்டவணையின்படி, 2026 மகளிர் டி:20 உலகக் கிண்ணத்தின் தொடக்கப் போட்டியில் இலங்கை – இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.
33 போட்டிகள் கொண்ட இந்தப் போட்டி அடுத்த வருடம் ஜூன் 12 ஆம் ஆம் திகதி எட்ஜ்பாஸ்டனில் தொடங்கும்.
இறுதிப் போட்டி ஜூலை 5 ஆம் திகதி லொர்ட்ஸில் நடைபெறும்.
போட்டியில் பங்கேற்கும் 12 அணிகள் தலா ஆறு பேர் கொண்ட இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்படும்.
ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும்.
அரையிறுதிப் போட்டிகள் முறையே ஜூன் 30 மற்றும் ஜூலை 2 ஆகிய திகதிகளில் ஓவலில் நடைபெறும்.
குழு 1 இல் அவுஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இரண்டு தகுதிச் சுற்று அணிகள் உள்ளன.
குரூப் 2 இல் இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து, இலங்கை மற்றும் இரண்டு தகுதிச் சுற்று அணிகள் உள்ளன.
ஜூன் 14 அன்று எட்ஜ்பாஸ்டனில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டி நடைபெறும்.
லோர்ட்ஸ், ஓவல் மற்றும் எட்ஜ்பாஸ்டன் தவிர, ஓல்ட் டிராஃபோர்டு கிரிக்கெட் மைதானம், பிரிஸ்டல் கவுண்டி மைதானம் மற்றும் ஹாம்ப்ஷயர் பவுல் ஆகியவையும் உலகக் கிண்ண போட்டிகளை நடத்தும்.
அந் நாட்டு நேரப்படி, காலை 10:30 மணி, பிற்பகல் 2:30 மணி மற்றும் மாலை 6:30 மணிக்கு ஆட்டங்கள் தொடங்கும்.