2 காலிறுதிப் போட்டிகள், 12 அரையிறுதிப் போட்டிகள், ஒரு இறுதிப் போட்டி என இதுவரை களம் கண்டு இறுதியாக தென்னாப்பிரிக்கா மைல்கல்லை எட்டியுள்ளது.
அதன்படி, அவர்கள் 27 வருட நீண்ட காத்திருப்புக்குப் முற்றுப் புள்ளி வைத்து ஒரு ஐ.சி.சி. போட்டியின் சாம்பியன்களாக முடிசூட்டப்பட்டுள்ளனர்.
ஜூன் 14 சனிக்கிழமையன்று வலிமைமிக்க அவுஸ்திரேலியர்களுக்கு எதிராக ஐடன் மார்க்ராம் மற்றும் டெம்பா பவுமா ஆகியோர் நாட்டின் ஐசி.சி. கிண்ணத்துக்கான காத்திருப்பினை முடிவுக்குக் கொண்டுவந்தபோது தென்னாப்பிரிக்க வீரர்களின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா ஒரு அற்புதமான மறுபிரவேசத்தை பதிவு செய்தது.
நடப்பு சாம்பியன்களுக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஒரு சாதனை இலக்கைத் துரத்தியது.
ஆட்டத்தின் முதல் இரண்டு நாட்களில் 28 விக்கெட்டுகளை வீழ்த்திய லோர்ட்ஸ் மைதானத்தில் மார்க்ராமும் பவுமாவும் ஒரு எதிர்க்க முடியாத ஜோடியாக மூன்றாவது நாளில் கைகோர்த்தனர்.
இந்த ஜோடி விதிவிலக்கான மன உறுதியை வெளிப்படுத்தினர்.
போட்டியின் நான்காம் நாளான இன்று தென்னாப்பிரிக்கா துடுப்பாட்டம் செய்ய வந்தபோது வெற்றிக்கு 69 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
மார்க்ராமும் பவுமாவும் சிறப்பாக ஆட்டத்தை தொடங்கினர்.
ஆனால், 4 ஆம் நாளின் மூன்றாவது ஓவரில் பேட் கம்மின்ஸ் வீசிய ஒரு அற்புதமான பந்து பவுமாவின் துடுப்பாட்ட மட்டையின் விளிம்பில் முத்தமிட்டு, நேராக விக்கெட் காப்பாளின் கைகளுக்குச் சென்றது.
இதனால், பவுமா 66 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மார்க்ராமுடன் இணைந்து எதிர்கொண்டார்.
ஆனால், மிட்செல் ஸ்டார்க்கின் பந்து வீச்சில் 43 பந்துகளில் 8 ஓட்டம்) ஆட்டமிழந்தார்.
இருப்பினும், ஒரே நாளில் 102 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த மார்க்ராம், தென்னாப்பிரிக்காவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்று, கடந்த 27 ஆண்டுகளில் முதல் ஐசிசி பட்டத்தை அவர்களுக்குப் பெற்றுத் தந்தார்.
அதன்படி, தென்னாப்பிரிக்கா 83.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 282 ஓட்டங்களை பெற்று சாம்பியன் ஆனது.
மார்க்ராம் ஆட்டமிழக்காது 207 பந்துகளில் 136 ஓட்டங்களை குவித்தார்.
வெற்றிக்கான இறுதி ஓட்டம் எடுத்தவுடன், தென்னாப்பிரிக்க வீரர்கள் டிரஸ்ஸிங் அறையில் அமர்ந்து, லார்ட்ஸ் மைதானத்தில் ரசிகர்கள் கண்ணீர் வடித்த தருணத்தில் நனைந்தனர்.
முன்னாள் வீரர்கள் தங்கள் தேசிய அணிக்காக பாடல்களைப் பாடிக்கொண்டே, ஒரு கணம் கற்பனையான வெளிப்பாட்டில் தங்கள் இதயங்களை நிரப்பி அழுதனர்.
உலக கிரிக்கெட் வரலாற்றில் எந்த அணியையும் விட அதிக வெற்றிகளுடன் தென்னாப்பிரிக்கா இறுதிப் போட்டிக்கு வந்தது.
15 ஐசிசி போட்டிகளில் நாக் அவுட் நிலையில் தோற்கடிக்கப்பட்டு, பெரும்பாலான போட்டிகளில் தொடர்ந்து காலிறுதி மற்றும் அரையிறுதிக்கு முன்னேறிய போதிலும், பெருமைமிக்க கிரிக்கெட் நாடான தென்னாப்பிரிக்காவிற்கு இது ஒரு சோகமான தருணமாக இருந்தது.
தென்னாப்பிரிக்காவின் முதல் கருப்பின டெஸ்ட் தலைவர், 2015 ஒருநாள் உலகக் கிண்ணத்தின் கசப்பான அனுபவங்களின் 10 ஆண்டுகளின் பின்னர்அணியை ஐசிசி பட்டத்திற்கு அழைத்துச் சென்றதால் இந்த தருணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.
அதேநேரம், அவுஸ்திரேலிய அணியின் தலைவராக ஐசிசியின் இறுதிப் போட்டி ஒன்றில் பேட் கம்மின்ஸ் தழுவிய முதல் தோல்வி இதுவாகும்.