இந்த வருடம் முதல் 3 மாதங்களில் வாகன இறக்குமதி மூலம் 136 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டியதாக, திறைசேரி அதிகாரிகள் அரசாங்க நிதி பற்றிய குழுவில் தெரிவித்துள்ளனர்.
இதன்மூலம் அரசாங்கம் எதிர்பார்க்கும் 450 பில்லியன் ரூபா வருமானத்தை இந்த வருட இறுதிக்குள் அடைய முடியுமென அரசாங்க நிதி பற்றிய குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.