48 மணிநேர தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் ரயில்வே காவலர்கள்!

நீண்டகாலமாக தீர்க்கப்படாத நிர்வாகப் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு, இந்த வாரம் 48 மணி நேர தொழிற்சங்கப் போராட்டத்தை ஆரம்பிக்கப் போவதாக இலங்கை ரயில்வே காவலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தப் பிரச்சினைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதனால், ஜூன் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அடையாள வேலைநிறுத்தத்தைத் தொடங்கப்போவதாக சங்கம் கூறியுள்ளது.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!