8
2023 ஆம் ஆண்டு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்த பின்னர், முன்னாள் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து (CID) வெளியேறியுள்ளார்.
தகவல்களின்படி, 5 ½ மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் அளித்த பின்னர் டிரான் அலஸ் சிஐடியிலிருந்து வெளியேறினார்.
2023 ஆம் ஆண்டு வெலிகமவில் உள்ள ஒரு முக்கிய விடுதிக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க முன்னாள் அமைச்சர் இன்று காலை குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையானார்.