சுமார் இரண்டு பில்லியன் மக்களுக்கு முக்கியமான நீர் ஆதாரமான இந்து குஷ் இமயமலை, இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் உலக வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக அதன் பனிப்பாறை பனியில் 75% வரை இழக்க நேரிடும் என்று ஒரு புதிய அறிவியல் ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
இந்த அப்பட்டமான கணிப்பு, பிராந்தியத்தின் பாதிப்பு மற்றும் ஆசியா முழுவதும் நீர் பாதுகாப்பிற்கான நீண்டகால விளைவுகளை எடுத்துக் காட்டுகிறது.
முன்னணி இதழ் ஒன்றில் வெளியிடப்பட்ட இந்த கண்டுபிடிப்பு, வலுவான காலநிலை நடவடிக்கைக்கான அவசரத் தேவையை எடுத்துக்காட்டுகின்றன.
பாரிஸ் ஒப்பந்தத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்சியஸாகக் கட்டுப்படுத்துவதில் நாடுகள் வெற்றி பெற்றால், இமயமலை மற்றும் காகசஸில் உள்ள பனிப்பாறை பனியின் 40-45% பாதுகாக்கப்படலாம் என்று ஆய்வு மதிப்பிடுகிறது.
உலகளவில், இது தற்போதைய பனிப்பாறை அளவில் 54 சதவீதத்தை இது தக்க வைத்துக் கொண்டுள்ளது.
நூற்றாண்டின் இறுதிக்குள் உலகம் 2.7 டிகிரி செல்சியஸ் வெப்பமயமாதலை நோக்கிய அதன் தற்போதைய பாதையில் தொடர்ந்தால், இது வெறும் 24% ஆக மாறும்.
மனித சமூகங்களுக்கு இன்றியமையாத பனிப்பாறைப் பகுதிகளான ஐரோப்பிய ஆல்ப்ஸ், வட அமெரிக்காவின் ராக்கி மலைகள் மற்றும் ஐஸ்லாந்து உள்ளிட்டவையும் வெப்பமயமாதல் பிரச்சினையால் ஆபத்தில் உள்ளன.
2 டிகிரி செல்சியஸ் வெப்பமயமாதலில், இந்தப் பகுதிகள் கிட்டத்தட்ட அனைத்து பனியையும் இழக்க நேரிடும் என்றும் கூறப்படுகிறது.