NPP பிரதேச சபை உறுப்பினர் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு




வெலிகம பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் சட்டத்தரணி தாரக நாணயக்காரவின் வெலிகம உடுகாவ பகுதி வீட்டின் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று அதிகாலை 4.40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவிக்கின்றனர். அவருக்கு கொலை மிரட்டல் வந்ததாகக் கூறி, வீட்டையும் போலீசார் பாதுகாத்தனர்.

வீட்டின் வாசலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மீதும் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், பின்னர் அவர்கள் தப்பி ஓடிவிட்டதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.



நன்றி

Leave a Reply