WHO பிரதிநிதியுடன் கலந்துரையாடிய செந்தில் தொண்டமான்!

சுவிட்சலார்ந்தின் ஜெனீவா நகரில் உள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின்  (WHO) தலைமை காரியாலயத்தின் சர்வதேச சுகாதாரப் பணியாளர் ஜிம் கேம்பலை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஒரு மணி நேரத்திற்கு அதிகமாக இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் இலங்கையின் சுகாதார நிலைமைகள் மற்றும் உலக சுகாதர ஸ்தாபனம் இலங்கையில் முன்னெடுத்துவரும் சேவைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பில் இருவரும் கலந்துரையாடல் மேற்கொண்டனர்.

குறிப்பாக இலங்கையின் மலையக சமூகம் எதிர்கொள்ளும் சுகாதாரம், ஊட்டச்சத்துப் பற்றாக்குறை மற்றும் ஏனைய சுகாதார பிரச்சினைகள் தொடர்பாகவும் அது தொடர்பான சவால்கள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டது.

மலையகப் பகுதியில் வாழும் முதியோர், சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோரின் ஊட்டச்சத்தை அதிகரிப்பது தொடர்பாக சர்வதேச சுகாதாரப் பணியாளர் ஜிம் கேம்பலிடம், செந்தில் தொண்டமான் தெளிவுப்படுத்தியதுடன், இதற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின்  உதவிகளின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

மலையக சமூகம் எதிர்கொள்ளும் சுகாதார ரீதியான சவால்களை தீர்க்க WHO இன் ஆதரவு அவசியம் எனவும் செந்தில் தொண்டமான் ஜிம் கேம்பலிடம் எடுத்துரைத்தார்.

இதற்கு ஜிம் கேம்பல் சாதகமான பதிலளித்ததுடன், மலையக சமூகத்தின் பிரச்சினைகளை நேரடி கவனத்திற்கு கொண்டு வந்தமைக்கு செந்தில் தொண்டமானுக்கு நன்றி தெரிவித்ததுடன், மலையக பெருந்தோட்டத் சமூகத்தின் சுகாதார மேம்படுகளுக்கு உலக சுகாதார ஸ்தாபனம்  தமது முழு ஆதரவை வழங்கும் எனவும் உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!