சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று, பந்து வீசத் தீர்மானித்துள்ளது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடுவதற்காக அவுஸ்திரேலிய அணி களமிறங்கவுள்ளது.
லண்டனில் உள்ள லோர்ட்ஸ் மைதானத்தில் இன்று (11) தொடங்கும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவும் அவுஸ்திரேலியாவும் மோதுகின்றன.
நடப்பு சாம்பியனான அவுஸ்திரேலியா, மதிப்புமிக்க ஐசிசி டெஸ்ட் செங்கோல் கிண்ணத்தை இந்தப் போட்டியில் வைத்துக் கொள்ள முயற்சிக்கும்.
அதேநேரத்தில் தென்னாப்பிரிக்கா, 1998 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தங்கள் முதல் ஐசிசி பட்டத்தை நோக்கிச் செல்லும்.
தென்னாப்பிரிக்கா WTC 2023-25 புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.
அதன் 12 போட்டிகளில் எட்டு போட்டிகளில் வெற்றி பெற்றது.
அதேநேரத்தில் அவுஸ்திரேலியா, 19 போட்டிகளில் 13 வெற்றிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
தென்னாப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா இடையேயான WTC இறுதிப் போட்டி ஜூன் 11-15 வரை நடைபெறும்.
போட்டிகளானது இலங்கை நேரப்படி பிற்பகல் 03.00 மணிக்கு ஆரம்பமாகும்.
இதனிடையே, இறுதிப் போட்டிக்காக இரு அணிகளும் தங்கள் விளையாடும் XI அணிகளை அறிவித்துள்ளன.